நெங்கிரி-கிளந்தான் ஆறுகள் ஒட்டிய 19 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம்!

- Muthu Kumar
- 09 Dec, 2024
கிளந்தான், டிச. 9 -
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை வரை கிளந்தானில் உள்ள நெங்கிரி ஆறு மற்றும் கிளந்தான் ஆற்றிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள சுமார் 19 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று அஞ்சப்படுகிறது.தொடர் மழை எச்சரிக்கை குறித்து இம்மாதம் 5-ஆம் தேதி வானிலை ஆராய்ச்சித் துறை அறிவித்ததைத் தொடர்ந்து, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை அந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
குவா மூசாங் மாவட்டத்தின் நெங்கிரி ஆற்று பகுதியில் உள்ள கம்போங் பாசிர் தும்போ லாமா, கம்போங் கலா, கம்போங் ஜெராம் தெக்கோ, கம்போங் டாலாம் லா, கம்போங் கோலா பெத்திஸ், கம்போங் கோல சுங்கை, கம்போங் பெர்த்தாம் லாமா, பெர்த்தாம் பாரு மற்றும் கம்போங் பாசிர் தும்போ பாரு ஆகிய கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று, நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் துறை வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறியிருக்கின்றது
மாச்சாங் மாவட்டத்தில் உள்ள கிளந்தான் ஆற்றுப் பகுதியைச் சுற்றியுள்ள கம்போங் பாசிர் செனோர், கம்போங் கெரில்லா, கம்போங் கோல ஹௌ, கம்போங் தெமாங்கான் லாமா, தெமாங்கான், கம்போங் பௌஹ், கம்போங் தெலோக் சோ, கம்போங் பெலுகார் பாஞ்சாங், கம்போங் புக்கிட் பீசி மற்றும் கம்போங் பெர்தோக் ஆகிய ஆறுகள் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.இருந்ததலும் கணிக்கப்பட்ட கால நேரத்தைவிட முன்னதாகவோ அல்லது தாமதமாகவோ வெள்ளம் ஏற்படலாம் என்று, அத்துறை கூறியுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *