AI நுட்பத்தில் தவறான பதிவுகளுக்கு 1 மில்லியன் அபராதம் & 5 ஆண்டுகள் சிறை விதிக்கப்படலாம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 4:

மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான எம்சிஎம்சி, AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 1,225 தவறான பதிவுகளை டிசம்பர் 1-ல் நீக்கியுள்ளது - குழந்தை பாலியல் தொடர்பான பதிவுகள் கடந்த 2022 இல் 34 ஆக இருந்ததை விட, இந்த ஆண்டு 800 ஆக உயர்ந்துள்ளது. இது 2,252% அதிகமாகும் என்று  தகவல் தொடர்புத்துறை துணை அமைச்சர் Teo Nie Ching நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வணிக நோக்கங்களுக்காக வெளிப்படையான இது போன்ற உள்ளடக்கங்களை விநியோகிப்பதாகக் கண்டறியப்படும் எவருக்கும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் வரை அபராதம் விதிக்கப்படும் என்று ஆணையிடும் வகையில், தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச்  சட்டம் 1998 (சட்டம் 588) ஐ திருத்துவதற்கு அமைச்சு முன்மொழிந்ததாக தியோ குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *