சட்டவிரோதக் குடியேறிகளான 20 வெளிநாட்டினர் கைது!

- Sangeetha K Loganathan
- 14 Feb, 2025
பிப்ரவரி 14,
கிளாந்தானில் உள்ள தங்கும் விடுதியில் நடத்தப்பட்ட சோதனையில் 20 வெளிநாட்டினர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக எல்லை பாதுகாப்புச் சிறப்பு படையான PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார். 20 வெளிநாட்டினர்களைச் சட்டவிரோதமாக மலேசியாவுக்குக் கொண்டு வந்த 2 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் Jalan Tok Guru சாலையில் உள்ள தங்கும் விடுதியில் சந்தேகத்திற்குரிய நபர்கள் நடமாடுவதாகப் புகார் கிடைத்த நிலையில் சம்மந்தப்பட்ட தங்குவிடுதியில் சுற்றுலா பயணிகள் போல குடும்பமாகத் தங்கியிருந்த 8 பெண்கள் உட்பட 20 வெளிநாட்டினர்களிடமும் சோதனை மேற்கொண்ட நிலையில் இந்தோனேசியா, மியன்மார், இந்தியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளதாக அவர் எல்லை பாதுகாப்புச் சிறப்பு படையான PGA இயக்குநர் Datuk Nik Ros Azhan Nik Ab Hamid தெரிவித்தார். அவர்களிடமிருந்து RM98,000 மதிப்பிலானப் பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
PGA menyerbu sebuah penginapan di Kelantan serta mnahan 20 pendatang asing tanpa izin (PATI) serta dua lelaki tempatan yang disyaki penyeludup. Didapati warga Indonesia, Myanmar dan India cuba menyamar sebagai pelancong. Barangan bernilai RM98,000 turut dirampas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *