பாகிஸ்தானில் 216 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்!

top-news
FREE WEBSITE AD

பாகிஸ்தானில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 216 சிறைக் கைதிகள் தப்பியோடினா்.இது குறித்து ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

அப்போது அந்த நகரின் மாலிா் பகுதியில் உள்ள சிறைச் சாலையில் 600-க்கும் மேற்பட்ட கைதிகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது ஏற்பட்ட கூச்சல் குழப்பத்தைப் பயன்படுத்தி 216 கைதிகள் தப்பியோடினா். இந்தச் சம்பவத்தின்போது ஒரு கைதி கொல்லப்பட்டாா்; 3 துணை ராணுவப் படையினா் காயமடைந்தனா்.

தப்பியோடிய கைதிகளில் 80-க்கும் மேற்பட்டவா்கள் மீண்டும் பிடிபட்டனா். எஞ்சிய கைதிகளைத் தேடும் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்தன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *