RM 220,000 மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்! – லாரி ஓட்டுநர் கைது

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஜன 23: ஈப்போ, மேருவில் போதைப்பொருள் கடத்தியதாக 42 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனவரி 21 ஆம் தேதி காலை 11.20 மணியளவில் வாங்குபவருக்காக அந்நபர் காத்திருந்தபோது, ​​தனது வாகனத்திலிருந்து போதைப்பொருளை வெளியே எடுக்க முயன்றபோது பிடிபட்டதாக பேராக் காவல்துறைத் தலைவர் சுல்காஃப்லி சரியத் தெரிவித்தார்.

ஹெராயின் என நம்பப்படும் 44 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளை போலீசார் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அவற்றின் எடை சுமார் 19,246 கிராம் என்றும், RM220,000 மதிப்புடையது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இவற்றை சுமார் 40,000 போதைப்பித்தர்கள் பயன்படுத்தலாம் என்றும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு உதவுவதற்காக சந்தேக நபர் ஜனவரி 22 முதல் ஜனவரி 27 வரை ஆறு நாட்களுக்கு காவலில் வைக்கப்படுவார் என்றும் டி சுல்காஃப்லி தெரிவித்தார்.

 ஆரம்பக்கட்ட சிறுநீர் பரிசோதனைகளில் சந்தேக நபருக்கு மார்பின் வகை போதைப்போருள் பயன்பாடு இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும், போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தொடர்பான 13 குற்றப் பதிவுகள் அவரிடம் இருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

விசாரணைகளின் அடிப்படையில், இந்த கும்பல் கடந்த அக்டோபர் முதல் போதைப்பொருள் விநியோகத்தில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக நம்பப்படுகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *