ஹஜ் பெருநாளுக்காக 27,000 கால்நடைகள் இறக்குமதி!

top-news
FREE WEBSITE AD

பாடாங் பெசார், மே 23: வரவிருக்கும் புனித ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாட்டத்திற்கான தேவையைப் பூர்த்தி செய்ய 27,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இந்தக் கால்நடைகள் மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் துறையால் கடுமையான பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்தல் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

தாய்லாந்திலிருந்து வரும் இந்தக் கால்நடைகள் அனைத்தும் நோயற்றவை என்றும், குர்பான் சடங்கிற்காக விற்பனை செய்வதற்கும் அறுப்பதற்கும் பாதுகாப்பானவை என்றும் துறை உத்தரவாதம் அளிப்பதாக அத்துறையின் துணை தலைமை இயக்குநர் டாக்டர் அஸ்ஹரி ஷரிதான் அபு பக்கார்  கூறினார்.

கால் மற்றும் வாய் நோய் (FMD) மற்றும் கட்டித் தோல் நோய் (LSD) ஆகியவற்றின் அறிகுறிகள் தென்படுகிறதா என 14 நாள் தனிமைப்படுத்தல் காலத்தில் அவை கண்காணிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

 தனிமைப்படுத்தல் காலம் முழுவதும் நாங்கள் கண்காணிக்கும் முக்கிய நோய்களில் இந்த இரண்டும் அடங்கும் என்று அவர் இன்று பாடாங் பெசாரில் உள்ள MAQIS விலங்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் கூறினார்.

வரவிருக்கும் ஹரி ராயா ஹாஜி கொண்டாட்டங்களுக்கான தயாரிப்பாக, இதுவரை சுமார் 1,000 எருமைகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகத் துறை பதிவு செய்துள்ளதாக டாக்டர் அஸ்ஹரி ஷெரிடன் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *