கார் மோதிய விபத்தில் 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழப்பு!

- Muthu Kumar
- 20 Jan, 2025
வடக்கு-தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் KM 10.8 இல் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் மோதிய விபத்தில் 28 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஜொகூர் பாரு வடக்கு மாவட்ட காவல்துறை தலைவர் பல்வீர் சிங் தெரிவித்தார்.
கெம்பாஸில் இருந்து புக்கிட் அம்பார் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த 28 வயதுடைய நபர், காரை முந்திச் செல்ல இடமிருந்து வலமாக பாதையை மாற்றியபோது இந்த சம்பவம் நடந்ததாக நம்பப்படுகிறது.20 வயது பெண் ஓட்டிச் சென்ற கார், சரியான நேரத்தில் பிரேக் போட முடியாமல், அந்த இடத்தில் இருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக பல்வீர் சிங் கூறினார்.இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *