கடந்தாண்டில் மலேசியாவில் 2.8 கோடி இணையவழி மிரட்டல்கள்!

- Muthu Kumar
- 28 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 28-
கடந்தாண்டில் மலேசியாவில் கிட்டத்தட்ட 2 கோடியே 80 லட்சம் இணையதள மிரட்டல்கள் அடையாளம் காணப்பட்டு தடுக்கப்பட்டன.
2024ஆம் ஆண்டில் இரண்டு கோடியே எழுபத்தொன்பது லட்சம் மிரட்டல்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. முந்தைய 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது நான்கு விழுக்காடு அதிகமாகும் என்று பன்னாட்டு இணையப் பாதுகாப்பு நிறுவனமான காஸ்பெர்ஸ்கை குறிப்பிட்டது.
மலேசியாவில் அதிகரித்துவரும் இணையதள
மிரட்டல்கள் மிகுந்த கவலை அளிக்கக்கூடியதாக உள்ளது என்று அந்நிறுவனத்தின் தென்கிழக்காசிய வட்டார பொதுநிர்வாகியான இயோ சியாங் தியோங் கூறினார்.இணையக்குற்றவாளிகள் அதிநவீன அணுகுமுறையைக் பயன்படுத்தி வருகின்றனர். இது வர்த்தகர்களுக்கும் தனிநபர்களுக்கும் அபாயத்தை ஏற்படுத்தவதாக உள்ளது.
இந்த இணையதள மிரட்டல்களைத் தடுக்கக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இணையப் பாதுகாப்பில் கவனம் செலுத்தத் தவறினால், விபரீதமான விளைவுகளை நாம் எதிர்நோக்க வேண்டிவரும். தரவுகள் களவாடப்படுவது, நிதி இழப்பு போன்றவை அதில் அடங்கும் என்று இயோ சுட்டிக்காட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *