மின்சாரம் தாக்கியதால் 2 BOMBA வீரர்கள் காயம்!

top-news

ஜனவரி 23,

வணிகக் கடையின் மேல்பரப்பில் ஏற்பட்ட தீயை அணைக்கும் போது மின்சாரம் தாக்கியதில் இரு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்ததாகச் சபா மாநிலத் தீயணைப்பு ஆணைய அதிகாரி Noor Sherriyana Bohari தெரிவித்தார். நேற்று நள்ளரவு புட்டாடன் பகுதியில் உள்ள கடையில் தீ விபத்து ஏற்பட்டதாகப் பெறப்பட்ட அவசர அழைப்பை அடுத்து தீயை அணைக்கும் பணியில் இருந்த 34 வயது 38 வயது இரு தீயணைப்பு வீரர்கள் மின்சாரம் தாக்கியதால் காயமடைந்ததாக அவர் தெரிவித்தார். 

தீ விபத்தால் பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை என்றும் நள்ளிரவு 1.40 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் காயமடைந்த 2 தீயணைப்பு வீரர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் Noor Sherriyana Bohari தெரிவித்தார்.

Dua anggota bomba cedera terkena renjatan elektrik ketika memadam kebakaran rumah atas kedai di Petagas, Putatan. Kebakaran berjaya dikawal dengan bantuan 37 anggota bomba. Tiada mangsa awam dilaporkan, manakala punca kebakaran masih disiasat.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *