ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சகோதரர்கள் கடலில் மூழ்கி பலி!

- Sangeetha K Loganathan
- 13 Dec, 2024
டிசம்பர் 13,
கடலில் குளித்துக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் திடீரெனக் கடலில் மூழ்கி உயிரிழந்தனர். நேற்று நண்பகல் 2 மணியளவில் சரவாக்கில் உள்ள மீரி கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த சகோதரர்கள் இருவர் கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்டதாகவும் மாலை 2.50 மணிக்கு மீட்புப் படையினர் கடலின் 30 மீட்டர் தொலைவிலிருந்து இருவரின் உடலையும் சடலமாக மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்கள் 23 வயது 16 வயது இளைஞர்கள் என்றும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. சம்பவத்தின் போது உடன் இருந்த 18 வயது நண்பர் கரையிலிருந்து மீட்புப் படையினருக்குத் தகவல் தெரிவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது
Dua beradik, 23 dan 16 tahun, lemas di laut Miri selepas ditarik ombak ketika mandi. Mayat ditemui 30 meter dari pantai. Insiden dilaporkan oleh rakan mereka yang berusia 18 tahun.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *