தீயில் கருகிய 2 வீடுகள்! 7 குடும்பங்கள் பாதிப்பு!

top-news

பிப்ரவரி 15,

தாவாவில் உள்ள கம்போங் புடாயா பாசிர் பூத்தே குடியிருப்புப் பகுதியில் உள்ள 2 வீடுகள் தீயில் கருகியதாகத் தாவாவ் மாவட்டத் தீயணைப்பு ஆணையத்தின் இயக்குநர் Jemishin Ujin தெரிவித்தார். நண்பகல் 12.33 மணிக்கு அவசர அழைப்புக் கிடைத்ததாகவும் அதன் 15 தீயணைப்பு அதிகாரிகள் தீயைக் கட்டுப்படுத்த சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

பலகையாலான வீடு என்பதால் தீ வேகமாகப் பரவியதாகவும் 2 வீடுகளும் முற்றிலும் தீயில் எரிந்து கருகியதாகவும் அவர் தெரிவித்தார். பிற்பகல் 1.05 மணிக்குத் தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் தீ விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். 2 வீடுகளில் தங்கியிருந்த 7 குடும்பங்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dua rumah di Kampung Budaya Pasir Putih, Tawa musnah dalam kebakaran yang berlaku pada tengah hari. Tujuh keluarga terjejas namun tiada kemalangan jiwa dilaporkan. Pihak bomba berjaya mengawal api dalam masa 30 minit selepas menerima panggilan kecemasan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *