72 வயது பெண்ணை செங்கலால் தாக்கி கொள்ளையடித்த 30 வயது பெண்!

top-news
FREE WEBSITE AD

செத்தியூ, பிப் 12: நேற்று செத்தியூ ஃபெல்டா சலோக் ரஹ்மத்தில் உள்ள ஒரு வீட்டில், திருட வந்த பெண் ஒருவர்,  72 வயது முதிய பெண்மணியைத் தாக்கி நகையைக் கொள்ளையிட்டுச் சென்றார், இதனால்  காயமடை முதிய மாதுவுக்கு சுமார் RM10,000 இழப்பு ஏற்பட்டது.

நேற்று மதியம் 1 மணியளவில் வாடகைக்கு வீடு கேட்பதாகக் கூறி சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை அணுகினார்.

தனது வீட்டின் படிகளில் இருந்த பாதிக்கப்பட்ட அந்த முதிய பெண், வாடகைக்கு வீடு இருப்பதாக சந்தேக நபரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து சந்தேக நபர் வீட்டைப் பார்க்கச் சென்றார்.

அங்கு சென்றதும், சந்தேக நபர் பாதிக்கப்பட்டவரை படுக்கையில் உட்காரச் சொல்லி, பின்னர் அவளைக் கீழே தள்ளி முகத்தை ஒரு துணியால் மூடியிருப்பதாக செத்தியூ காவல்துறைத் தலைவர் ஜைன் மாட் டிரிஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர் எதிர்த்தபோது, ​​சந்தேக நபர் உடைந்த செங்கல் துண்டால் நெற்றியில் அடித்து, அவரது தங்க நகையை எடுத்துக்கொண்டு தப்பி ஓடிவிட்டார்.

சத்தம் கேட்ட அண்டை வீட்டுக்காரர், இரத்த வெள்ளத்தில் மூழ்கியிருந்த வயதான பெண்ணைக் கண்டு செத்தியூ மருத்துவமனைக்கு விரைந்தார். சிகிச்சைக்குப் பிறகு அவர்  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இந்நிலையில் சந்தேக நபரை தாங்கள் தேடி வருவதாகவும், அவருக்கு 30 வயது இருக்கும் என்றும் ஜைன் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *