தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை பகுதியில் 300 தற்காலிக கடைகள் !

- Muthu Kumar
- 06 Feb, 2025
ஷா ஆலம், பிப். 6 –
தைப்பூசத்தை முன்னிட்டு பத்துமலை, ஸ்ரீ சுப்பிரமணியர் கோயில் தேவஸ்தானத்தைச் சுற்றியுள்ள பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 300 தற்காலிக கடைகள் தற்போது வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 175 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக செலாயாங் நகராண்மைக் கழகத்தின் (எம்.பி.எஸ்.) வர்த்தகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவை தவிர, அரசு சாரா நிறுவனங்களுக்கு 28 இடங்களும் மாற்றுத்திறனாளிகளுக்கு 30 சதவீத தள்ளுபடியில் 15 இடங்களும் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதோடு, உணவின் தூய்மை மற்றும் தரத்தை உறுதி செய்ய வணிகர்கள் நினைவூட்டப்படுகிறார்கள் என்று நகராண்மைக்கழகம் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *