வெளிநாட்டுத் தொழிலாளர்களை சட்டப்பூர்வமாக்கும் RTO 3.0 திட்டம் அறிமுகமா? – அது தவறான தகவல்

- Shan Siva
- 11 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 11: மலேசிய குடிநுழைவுத் துறை, அரசாங்கம் தொழிலாளர் மறுசீரமைப்புத் திட்டமான (RTK 3.0) ஐ விரைவில் செயல்படுத்தும் என்ற வைரல் கூற்றுகளை நிராகரித்துள்ளது.
இதனை அடுத்து, RTK திட்டத்தின்
பெயரைப் பயன்படுத்தி ஆதாயம் பெற விரும்பும் எந்தவொரு தரப்பினராலும் பொதுமக்கள்
தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்று அத்துறை அறிவுறுத்தியது.
துல்லியமான
மற்றும் புதுப்பித்த தகவல்களுக்கு குடிநுழைவுத் துறையின் அதிகாரப்பூர்வ போர்டல்
மற்றும் சமூக ஊடகக் கணக்குகளைப் பார்வையிடலாம் என ஜகாரியா பொதுமக்களை
வலியுறுத்தினார்.
ஜனவரி 27,
2023 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட RTK 2.0 திட்டம், ஜூன் 30, 2024 அன்று
முடிவடைந்தது.
இந்தத் திட்டம்,
நாட்டில் வெளிநாட்டுத் தொழிலாளர்களை
சட்டப்பூர்வமாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். கடுமையான அரசாங்க
நிபந்தனைகளின் கீழ் தகுதிவாய்ந்த முதலாளிகளால் சட்டப்பூர்வமாக பணியமர்த்த
அனுமதிக்கிறது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *