மூன்றாவது மாடியில் பந்து விளையாடும் போது ஏற்பட்ட துயர விபத்தில் 32 வயது நபர் உயிரிழப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 4:

தலைநகர் புடு அருகே உள்ள ஒரு கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து பந்து விளையாடும் போது ஏற்பட்ட ஒரு துயர விபத்தில் 32 வயது நபர் உயிரிழந்தார்.பாதிக்கப்பட்டவர் பந்தை எடுக்க முயன்றபோது அவர் கீழே தரையில் விழுந்ததாக நம்பப்படுகிறது.

செவ்வாய்க்கிழமை இரவு 9.43 மணிக்கு இந்த சம்பவம் பதிவாகியதாக வாங்சா மாஜு காவல்துறைத் தலைவர் உதவி ஆணையர் முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
விழும் முன் பாதிக்கப்பட்டவர் மூன்றாவது மாடியில் பந்து விளையாடிக் கொண்டிருந்ததாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு திடீர் மரணம் (SDR) என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் லாசிம் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *