செர்டாங்கில் சட்ட விரோதக் குடியேறிகள் 37 பேர் கைது!

- Shan Siva
- 12 Feb, 2025
செர்டாங்,பிப் 12: செர்டாங்கில் உள்ள ஓர்
அடுக்குமாடி குடியிருப்பில் நடத்தப்பட்ட சோதனையில் சட்டவிரோத குடியேறிகள் என
சந்தேகிக்கப்படும் 37 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிப்ரவரி 11 அன்று செர்டாங்கில் உள்ள பங்சாபுரி திமூரில் இந்த சோதனை நடந்ததாக குடிநுழைவுத்
துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ஜகாரியா ஷாபான் அறிவித்தார்.
மொத்தம் 82 நபர்களை சோதனை செய்ததில் செ 19 முதல் 50 வயதுக்குட்பட்ட 37 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
அவர்களில் பங்களாதேஷ், மியான்மர், இந்தோனேசியர்கள் மற்றும் பாகிஸ்தானியர்கள் அடங்குவர் என்று அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *