ஜொகூரில் 38 SPM மாணவர்கள் வெள்ளத்தால் பாதிப்பு!

top-news
FREE WEBSITE AD

ஜொகூர், ஜன 13: ஜோகூரில் மொத்தம் 38 SPM மாணவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில நிர்வாக கவுன்சிலர் அஸ்னான் தமின் தெரிவித்தார்.

அவர்களில் பெரும்பாலோர் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்குமிடம் தேடுவதாகவும், ஐந்து பேர் தங்கள் உறவினர்களின் வீடுகளில் தங்கியிருப்பதாகவும் மாநில கல்வி மற்றும் தகவல் குழுத் தலைவர் கூறினார்.

கோத்தா திங்கியில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பதிவாகியுள்ளனர். மொத்தம் 12 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைத் தொடர்ந்து கூலாயில் எட்டு மாணவர்களும், பொந்தியானில் ஏழு பேரும், குளுவாங்கில் நான்கு பேரும், , பாசிர் கூடாங்கில் நான்கு பேரும் ஜொகூர் பாருவில் மூன்று பேரும் உள்ளனர் என்றும் அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *