RM21,000 மதிப்பிலானக் கடத்தல் பொருள்களுடன் 3 வெளிநாட்டினர் கைது!

top-news

பிப்ரவரி 10,

கடல் வழியாக மலேசியாவிலிருந்து மானிய விலை பொருள்களைக் கடத்த முயன்ற 3 வெளிநாட்டினரைக் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தினர் கைது செய்தனர். நள்ளிரவு 12.13 மணியளவில் சந்தேகத்திற்குரிய படகு சபா Kudat கடல் எல்லைக்குள் சுற்றி வந்த நிலையில் படகைச் சோதனையிட்டதில் பெட்ரோல் அடங்கிய பீப்பாய்களும் 100 பாக்கெட்டுகள் கோதுமை, 120 பாக்கெட்டுகள் சரக்கரை பறிமுதல் செய்யப்பட்டது.

படகிலிருந்த 20 முதல் 21 வயதுள்ள 3 பிலிப்பைன்ஸ் நாட்டினர்களும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மலேசியாவிலிருந்து வெளிநாட்டுக்குச் சட்டவிரோதமாகப் பொருள்களைக் கடத்தும் கும்பலைச் சேர்ந்தவர்கள் இவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tiga warga Filipina ditahan ketika cuba menyeludup barangan bersubsidi bernilai RM21,000 melalui perairan Kudat, Sabah. Antara barangan dirampas ialah petrol, gandum, dan gula. Suspek berusia 20 hingga 21 tahun kini dalam tahanan untuk siasatan lanjut.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *