நேற்றைய மகா கும்பமேளா கூட்ட நெரிசலில் 40 பேர் பலி! 60 பேர் காயம்!

top-news

ஜனவரி 30,

இந்தியாவில் உத்திரப் பிரதேசத்தில் 45 நாள்களுக்குத் தொடர்ந்து கொண்டாடப்படும் மகா கும்பமேளவின் நேற்றைய சிறப்பு வழிபாட்டில் ஏற்பட்ட கூட்ட நேரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்ததாகவும் 60 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நேற்று மவுனி அமாவாசை சிறப்பு வழிபாட்டின் போது கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் இச்சம்பவம் நிகழ்ந்ததாக உத்திரப் பிரதேச முதலமைச்சர் Yogi Adityanath தெரிவித்துள்ளார்.  தற்போதைய நிலவரத்தின்படி 40 பேரின் உடல் மீட்கப்பட்டிருப்பதாகவும் கூட்டம் அதிகமாக இருப்பதால் மீட்புப் பணிகள் தாமதப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரிசலில் கயமடைந்த 60க்கும் மேற்பட்ட பக்தர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் மேலும் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Seramai 40 orang maut dan lebih 60 cedera dalam insiden rempuhan semasa perayaan Maha Kumbh Mela di Uttar Pradesh, India. Kejadian berlaku semasa upacara khas Mauni Amavasya. Operasi menyelamat masih diteruskan di lokasi kejadian.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *