வெ. 50 லட்சம் வரி பாக்கி விவகாரம்- முக்ரிஸின் மனு செவிமடுக்கப்படும்!

- Muthu Kumar
- 03 Jan, 2025
கோலாலம்பூர், ஜன. 3-
ஐம்பது லட்சத்து இருபதாயிரம் வெள்ளி வரி பாக்கியைச் செலுத்தும்படி உள்நாட்டு வருவாய் வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவை எதிர்த்து விண்ணப்பம் செய்ய முக்ரிஸ் மகாதீருக்கு கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது.
2017, 2018 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுக்கான வருமானவரி பாக்கியைச் செலுத்தும்படி உள்நாட்டு வருவாய் வாரியம் பிறப்பித்துள்ள அறிவிக்கைகளை (நோட்டீஸ்) நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும் என்று கெடாவின் முன்னாள் மந்திரி பெசாருமான முக்ரிஸ் நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்ரிஸின் அந்த சீராய்வு மனு மீதான மேலாண்மை இம்மாதம் ஏழாம் தேதியன்று நடைபெறும். நீதிபதி அமர்ஜிட் சிங் முன்னிலையில் அவ்வழக்கு விசாரணை நடைபெறும்.
அந்த அறிவிக்கைகள் கடந்தாண்டு செப்டம்பர் 27ஆம் தேதி வெளியிடப்பட்டன. 2017ஆம் ஆண்டில் 25 லட்சத்து 60ஆயிரம் வெள்ளியும் 2018ஆம் ஆண்டில் 24 லட்சத்து 40 ஆயிரம் வெள்ளியும் 2019ஆம் ஆண்டில் 16,826.37 வெள்ளியும் வரிபாக்கி வைக்கப்பட்டிருப்பதாக அந்த அறிவிக்கைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தன.வரிபாக்கி பற்றி வருவாய்த்துறை தவறாகக் கணக்கிட்டுள்ளது என்று தமது விண்ணப்பத்தில் முக்ரிஸ் கூறியுள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *