இவ்வாண்டு பண்டிகைக் காலங்களில் 50% டோல் கழிவு தொடரப்படும்!

top-news
FREE WEBSITE AD

கோல சிலாங்கூர், பிப். 5-

இவ்வாண்டில் கொண்டாடப்படும் பெருநாள் காலங்களின்போது, 50 விழுக்காடு டோல் கட்டணக் கழிவு வழங்கப்படுவது தொடரப்படும் என்று. பொதுப்பணி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி அறிவித்துள்ளார்.சிலாங்கூர், சுங்கை பெசாருக்கு நேற்று செவ்வாய்க்கிழமை பணி நிமித்தம் வருகை புரிந்தபோது செய்தியாளர்களை சந்தித்த நந்தா லிங்கி இச்செய்தியை அறிவித்தார்.

கடந்த வாரம் கொண்டாடப்பட்ட சீனப் புத்தாண்டை முன்னிட்டு, நாடு முழுமையிலும் உள்ள நெடுஞ்சாலைகளில், வழக்கமான டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு கழிவை வழங்க அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.அத்தகைய டோல் கட்டணக்
கழிவு இரண்டு நாட்களுக்கு அதாவது ஜனவரி 27 மற்றும் 28ஆம் தேதிகளில் கார்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது.

கடந்த ஜனவரி 24ஆம் தேதி நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கு இணக்கம்
தெரிவிக்கப்பட்டதாகவும் இதற்காக அரசாங்கம் டோல் குத்தகை நிறுவனங்களுக்கு மொத்தம் இரண்டு கோடியே 80 ஆயிரம் வெள்ளியை இழப்பீடாக வழங்கியதாகவும் நந்தா தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *