ஐபிசிசி ஆணையத்திடம் போலீசுக்கு எதிராக 529 புகார்கள் சமர்ப்பிப்பு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்,டிச. 4-

சுயேச்சை போலீஸ் நடத்தை ஆணையம் (ஐபிசிசி) இதுவரை 529 புகார்களைக் கையாண்டுள்ளது. அப்புகார்கள் போலீஸ்காரர்கள் செய்த குற்றங்கள் மற்றும் லஞ்சஊழல்கள் சம்பந்தப்பட்டதாகும் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார்.

அப்புகார்களில் பெரும்பாலானவை குற்றச்செயல்கள் சம்பந்தப்பட்டவையாகும் என்று அவர் குறிப்பிட்டார். போலீஸ்காரர்களின் முறைகேடான நடவடிக்கைகளை அந்த ஆணையமே நேரடியாகவிசாரணை செய்தது. ஐபிசிசி இதுவரை 195 போலீஸ் வளாகங்களுக்கு வருகை மேற்கொண்டுள்ளது. புகார்களைக் கைக்கொள்ளும் புதிய விதிமுறைகளையும் அது தயாரித்துள்ளது. புலன்விசாரணையை முறைப்படுத்தும் திட்டத்தையும் அது அமல்படுத்தியுள்ளது என்று சைஃபுடின் கூறினார்.

போலீஸ்காரர்களுக்கு எதிரான புகார்களை விசாரித்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை மேற்கொள்ளும் நோக்கத்தில் ஐபிசிசி அமைக்கப்பட்டது. அது கடந்தாண்டு ஜூலையில் அமலுக்கு வந்தது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *