52 சட்டவிரோதக் குடியேறிகள் தாயகம் திரும்பினர்!

- Sangeetha K Loganathan
- 20 Jan, 2025
ஜனவரி 20,
சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்ட வெளிநாட்டினர்களில் 52 பேர் விசாரணைக்குப் பின் அவர்களது சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். Indonesia, Pakistan, Singapura நாடுகளைச் சேர்ந்தவர்கள் முழுமையான விசாரணைக்குப் பின்னரே தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறை தெரிவித்தது.
அவர்களைச் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பதற்கான முழு செலவுகளையும் அவர்களின் சொந்த சேமிப்பு, குடும்ப உறுப்பினர்கள் ஆகியோர் செலவழித்ததாகவும் விமான டிக்கெட்டுகளை அவர்கள் நாட்டுத் தூதரகம் ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
52 வெளிநாட்டினர்களும் மீண்டும் மலேசியாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebanyak 52 warga asing yang ditahan kerana tinggal secara haram di Malaysia telah dihantar pulang ke negara asal mereka termasuk Indonesia, Pakistan dan Singapura setelah disiasat. Mereka dilarang memasuki Malaysia semula.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *