ஊனமுற்ற சிறுமியிடம் அத்துமீறீய 60 வயது முதியவர்! – 15 ஆண்டுகள் சிறை

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 22: தனது அண்டைவீட்டுக்காரரின் ஊனமுற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக, ரொட்டி விற்பனையாளர் ஒருவருக்கு மூவாரில் உள்ள அமர்வு நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், எட்டு பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

​​60 வயதான தின் சாலே என்ற சம்பந்தப்பட்ட நபர் இரண்டு குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார்.

ஜனவரி 17 அன்று கைது செய்யப்பட்ட தேதியிலிருந்து சிறைத்தண்டனை அமலுக்கு வரும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

சிறைத்தண்டனை முடிந்த பிறகு, மறுவாழ்வு ஆலோசனைக்கு உட்படுத்தப்படவும், ஒரு வருடம் போலீஸ் மேற்பார்வைக்கு உட்படுத்தப்படவும் நீதிபதி  சயானி உத்தரவிட்டார்.

முதல் குற்றச்சாட்டில், ஜனவரி 11 அன்று நள்ளிரவு 12 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை குளுவாங்கில் உள்ள ஒரு வாடகை வீட்டின் சமையலறையில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தீன் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இரண்டாவது குற்றச்சாட்டில், அதே பாதிக்கப்பட்டவரை அதே நேரத்தில், இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 376(1) மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டம் 2017 இன் பிரிவு 14(a) ஆகியவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இவை ஒவ்வொன்றும் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி தண்டனை விதிக்க வகை செய்கிறது.

வழக்கின் உண்மைகளின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் பெற்றோர் தூங்கிக் கொண்டிருந்தபோது சிறுமியைத் துஷ்பிரயேகம் செய்துள்ளார்.

சிறுமியின் பெற்றோர் பின்னர் தனது மகள் குழப்பத்தில் இருப்பதைக் கண்டறிந்ததோடு, அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் செல்வதைக் கண்டனர். பின்னர் அவரது தாயார் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்,. அதன் பிறகு காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆஜராகாத நிலையில், துணை அரசு வழக்கறிஞர் ஒஸ்மான் அஃபான் வழக்கு தொடர்ந்தார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *