SPM தேர்வு எழுத வந்த 63 வயது மாணவர்கள்!

- Shan Siva
- 02 Jan, 2025
புத்ராஜெயா, ஜன 2: இன்று காலை 10 மணி நிலவரப்படி, 2024 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வுக்கு வருகை தருவோரின் விகிதம் 97% ஐ எட்டியுள்ளதாக கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் தெரிவித்தார்.
SPM எழுத்துத் தேர்வு இன்று தொடங்கி பிப்ரவரி 6 ஆம்
தேதி வரை நாடு முழுவதும் 3,337 தேர்வு மையங்களில் நடைபெறும் என்றும் 402,956
மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தேர்வு
செயல்முறையை எளிதாக்க 44,968 கல்வி அதிகாரிகளும், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள்
உட்பட 5,780 தன்னார்வலர்களும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஃபத்லினா கூறினார்.
நெகிரி
செம்பிலானில், 63 வயதுடைய இரண்டு மாணவர்கள் தேர்வெழுதினர்
என்றும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *