திரங்கானுவில் அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்!

- Sangeetha K Loganathan
- 04 Feb, 2025
பிப்ரவரி 4,
திரங்கானு மாநிலத்தில் பாலியல் குற்ற வழக்குகள் கடந்த ஆண்டுகளை விடவும் அதிகரித்துள்ளதாகத் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு 504 பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிந்ததாகவும் 2024 ஆம் ஆண்டு 643 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
திரங்கானு மாநிலத்தில் உள்ள காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பாலியல் குற்றங்களின் எண்ணிக்கையை ஆய்வு செய்த சிறப்புப் பணிக்குழு இதனைத் தெரிவித்திருப்பதாக அவர் தெரிவித்தார். கடந்த 2023 ஆம் ஆண்டை விடவும் 2024 ஆம் ஆண்டு 139 பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும் இது 18% அதிகரிப்பு என்றும் குழந்தைகளுக்கு எதிராக 154 பாலியல் புகார்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் திரங்கானு மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Mohd Khairi Khairuddin தெரிவித்தார்.
Ketua Polis Terengganu Datuk Mohd Khairi Khairuddin berkata sebanyak 643 kes jenayah seksual direkodkan di seluruh Terengganu sepanjang tahun lepas termasuk 154 kes melibatkan mangsa kanak-kanak. Jumlah kes kesalahan seksual di Terengganu didapati meningkat lebih 18 peratus berbanding 504 kes pada 2023.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *