RM 650 மில்லியன் மோசடி! - மலேசிய ஆடவர் தாய்லாந்தில் கைது!

top-news
FREE WEBSITE AD

பாங்காக், டிச 19: சுமார் 650 மில்லியன் பணமோசடி தொடர்பாக ஒரு மலேசிய ஆடவர் மற்றும் அவரது தாய்லாந்து மனைவியை தாய்லாந்து போலீஸார் கைது செய்துள்ளனர்.

இருவரும் பெரிய அளவிலான பணமோசடி திட்டத்தில் முக்கிய சந்தேக நபர்களாகக் கருதப்படுவதாக தாய்லாந்து மத்திய புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.

குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட வாரண்டின் கீழ் தேடப்பட்டு வந்த  38 வயதான மலேசியர், தாய்லாந்திற்குள் நுழையும் போது டிசம்பர் 16 அன்று சோங்க்லாவில் உள்ள சடாவோ குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டதாகவும், அவரது தாய்லாந்து மனைவி டிசம்பர் 18 அன்று வேறொரு இடத்தில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களால் சில போலி மொபைல் அப்ளிகேஷன்கள் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார்களைத் தொடர்ந்து அவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *