கெப்போங்கில் 67 சட்டவிரோதக் குடியேறிகள் கைது!

- Shan Siva
- 18 Dec, 2024
கோலாலம்பூர், டிச 18: நேற்றிரவு கெப்போங்கில் உள்ள கேளிக்கை மையத்தில் மேற்கொள்ளப்பட்ட
நடவடிக்கையில் மொத்தம் 67 சட்டவிரோத குடியேறிகள் மற்றும் மூன்று மலேசியர்கள் கைது
செய்யப்பட்டனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 57 பேர் பெண்கள் என்றும் 10 பேர் ஆண்கள் என்றும் கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமட் சௌபி வான் யூசோஃப் கூறினார். அதில் 46 பேர் தாய்லாந்து நாட்டினர், எட்டு வங்கதேசத்தினர், ஐந்து லாவோஸ் பிரஜைகள், நான்கு வியட்நாமியர்கள், இரண்டு மியன்மார் நாட்டவர்கள் இந்தியா மற்றும் சீன பிரஜைகள் தலா ஒருவர் அடங்குவர் என்று அவர் தெரிவித்தார்.
இரவு 11.30 மணியளவில் தொடங்கிய இந்த நடவடிக்கையின் போது, மூன்று உள்ளூர்வாசிகளாகிய இரண்டு பெண்கள் மற்றும் ஓர் ஆண் ஆகியோரும் கைது
செய்யப்பட்டதாக அவர் கூறினார்.
கைது செய்யப்பட்ட 25 முதல் 50 வயதுக்குட்பட்ட
சட்டவிரோத நபர்கள் புக்கிட் ஜலீல் குடிநுழைவுத்துறை
முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *