சபாவில் மாணவியைத் தக்கிய 6 மாணவிகள் மற்றும் 1 மாணவர் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 29: சபாவின் கோத்த கினபாலுவில், சமீபத்தில் ஒரு பள்ளி மாணவி தாக்கப்பட்ட சம்பவம் குறித்த விசாரணைக்கு உதவும் வகையில், ஏழு இடைநிலைப் பள்ளி மாணவர்களை காவல்துறை கைது செய்தது.

கோத்த கினபாலுவின் தற்காலிக காவல்துறைத் தலைவர் சையத் லோட் சையத் அப்துல் ரஹ்மான், 15 முதல் 17 வயதுக்குட்பட்ட ஆறு மாணவிகள் மற்றும் ஒரு மாணவன் என அனைத்து மாணவர்களும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

அந்த மாணவன் இந்த சம்பவம் முழுவதையும் பதிவு செய்ததாக நம்பப்படுகிறது என்று அவர் கூறியதாக பெரித்தா ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது.

கலவரம் மற்றும் குற்றவியல் மிரட்டல் ஆகியவற்றுக்காக, தண்டனைச் சட்டத்தின் 147 மற்றும் 506 பிரிவுகளின் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாக சையத் லாட் கூறினார்.

மே 22 அன்று காலை 8 மணிக்கு, 13 வயது பள்ளி மாணவி ஒருவர் மற்ற ஐந்து பள்ளி மாணவிகளால் தாக்கப்பட்டதில் காயமடைந்ததாக  காவல்துறை தெரிவித்தது.

மறுநாள் காலை 7.51 மணிக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்த மாணவியும், சந்தேக நபர்களும் கோத்த கினபாலுவைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் என்றும், அவர்கள் ஒரு வாட்ஸ்அப் குழு மூலம் அறிமுகமானவர்கள் என்றும் சையத் லோட் கூறினார்.

வாட்ஸ்அப் குழுவில் ஏற்பட்ட ஒரு தவறான புரிதலால் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.

விசாரணையில், சந்தேக நபர் இருவர் பாதிக்கப்பட்ட மாணவியை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்ததாகவும், பின்னர் மாணவிகள் அவரைச் சூழ்ந்து தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *