சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 6 இளைஞர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 21 Jan, 2025
ஜனவரி 21,
நள்ளிரவில் சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்டதாக 17 முதல் 19 வயதுள்ள 6 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தென் ஜொகூர் மாவட்டக் காவல் துறை தெரிவித்துள்ளது. ஜொகூரின் நகரச் சாலைகளில் நள்ளிரவுகளில் சட்டவிரோதமாக மோட்டார் சைக்கிள் பந்தயம் நடத்தப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் காவல் துறையின் நடத்திய சோதனையில் 12 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் பதின்ம வயதுள்ள 6 மோட்டார் சைக்கிளோட்டிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தென் ஜொகூர் மாவட்டக் காவல் ஆணையர் Raub Selamat தெரிவித்தார்.
Enam remaja berusia 17 hingga 19 tahun ditahan polis kerana terlibat dalam perlumbaan motosikal haram di bandar Johor. Sebanyak 12 motosikal turut dirampas dalam operasi yang dijalankan pada tengah malam.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *