7 வயது மகன் கொலை! தாயார் – அவரது காதலன் கைது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 12: அம்பாங்கில் 25 வயது பெண் ஒருவரும் அவரது 36 வயது காதலனும் நேற்று கைது செய்யப்பட்டனர்.

அவரது ஏழு வயது மகன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு இறந்ததாக சந்தேகத்தின் அடிப்படையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

தனது மகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மூச்சுத் திணறிவிட்டதாகக் கூறி சிறுவனின் தாயார் காவல்துறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டதாக அம்பாங்க் ஜெயா காவல்துறைத் தலைவர் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இருப்பினும், குழந்தையின் முகம், கழுத்து, கைகள் மற்றும் கால்களில் சிராய்ப்பு அடையாளங்களைக் கண்டறிந்த பின்னர், சிறுவன் தனது தாயார் மற்றும் அவரது காதலனால் துஷ்பிரயோகத்திற்கு ஆளானதாக போலீசார் சந்தேகித்தனர்.

பிரேதப் பரிசோதனையில் தலையில் ஏற்பட்ட உள் இரத்தப்போக்குதான் மரணத்திற்கான காரணம் என கண்டுபிடிக்கப்பட்டதாக அசாம் கூறினார்.

அந்த நபர் மெத்தாம்பெத்தமைன் உட்கொண்டிருப்பது தெரியவந்ததாகவும், அவர் மீது குற்றவியல் பதிவு இருப்பதாகவும் அசாம் கூறினார். இருவரும் ஜனவரி 17 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *