முகைதீன் மீதான 7 குற்றச்சாட்டுகள் நீதியின் நலனுக்காக கூட்டு விசாரணை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 16: முன்னாள் பிரதமர் முகைதீன் யாசின் மீது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்ததற்காக நான்கு குற்றச்சாட்டுகளையும், சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து பணம் பெற்றதற்காக மூன்று குற்றச்சாட்டுகளையும் விசாரிக்க கூட்டு விசாரணைக்கு அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இரண்டு குற்றச்சாட்டுகளும் ஒரே மாதிரியான செயல்களிலிருந்து எழுந்ததால் கூட்டு விசாரணையை அனுமதித்ததாக நீதிபதி அசுரா அல்வி கூறினார்.

நீதியின் நலனுக்காக கூட்டு விசாரணை அனுமதிக்கப்படுகிறது. மேலும், இது நீதிமன்றத்தின் நேரத்தையும் வளங்களையும் மிச்சப்படுத்தும் என்று அவர் தனது வாய்மொழி தீர்ப்பில் கூறினார்.

இந்தக் குற்றங்கள் நடந்தபோது அப்போது பிரதமராக இருந்த பெர்சாத்து தலைவர் முகைதீன் (வயது 77), தனது பதவியைப் பயன்படுத்தி புகாரி ஈக்விட்டி எஸ்.டி.என். பி.எச்.டி, நெப்டூரிஸ் எஸ்.டி.என். பி.எச்.டி, மம்ஃபோர் எஸ்.டி.என். பி.எச்.டி மற்றும் அஸ்மான் யூசாஃப் ஆகியோரிடமிருந்து தனது கட்சிக்காக RM232.5 மில்லியன் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டார்.

மார்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 20, 2021 வரை புத்ராஜெயாவில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அவர் RM200 மில்லியன் சம்பந்தப்பட்ட மூன்று பணமோசடி குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்கிறார்.

ஏழு குற்றச்சாட்டுகளும் ஒன்றோடொன்று தொடர்புடையவை என்பதால் அவற்றை ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்று துணை அரசு வழக்கறிஞர் வான் ஷஹாருதீன் வான் லாடின் சமர்ப்பித்திருந்தார்.

இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முகிதீனுக்காக வழக்கறிஞர்கள் கே குமாரேந்திரன் மற்றும் சேதன் ஜெத்வானி ஆகியோரும் ஆஜரானார்கள்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *