கால்வாயில் விழுந்த AUTISM சிறுவன் சடலமாக மீட்பு!

- Sangeetha K Loganathan
- 11 Jan, 2025
ஜனவரி 11,
நேற்று மாலை காணாமல் போனதாக நம்பப்பட்ட 7 வயது சிறுவன் இன்று காலை 8.15 மணிக்குச் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று மாலை 5 மணியளவில் 7 வயது சிறுவனைக் காணவில்லை என சிறுவனின் தாயார் Kota Setar காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில் 7 வயது சிறுவனைத் தேடும் பணி தொடங்கப்பட்டதாக Kota Setar மாவட்டக் காவல் ஆணையர் ACP Siti Nor Salawati Saad தெரிவித்தார்.
முதற்கட்ட தேடுதல் பணியில் சிறுவனின் உடைகளும் காலணிகளும் கிடைக்க பெற்ற நிலையில் சிறுவன் ஆழமானக் கால்வாயில் விழுந்ததாக உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் கால்வாயில் தேடுதல் பணியை மேற்கொண்டதாகவும் கால்வாய் இறுதியாகக் கெடா ஆற்றில் கலப்பதால் கெடா ஆற்றில் சோதனை நடத்தப்பட்டதில் இன்று காலை 8.15 மணிக்குச் சிறுவனின் உடல் சடலமாக மீட்கப்பட்டதாக Kota Setar மாவட்டக் காவல் ஆணையர் ACP Siti Nor Salawati Saad விளக்கமளித்தார்.
Seorang kanak-kanak autistik berusia tujuh tahun yang dilaporkan hilang ditemui lemas di Sungai Kedah, berhampiran rumahnya. Mayatnya dijumpai terapung dengan pakaian dan selipar ditemui di tepi longkang. Kes diklasifikasikan sebagai mati mengejut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *