கால்வாயில் விழுந்த சிறுவனைக் காணவில்லை!

top-news

ஜனவரி 11,

நேற்றிரவு கெடாவின் Taman Tunku Tabor குடியிருப்புப் பகுதியில் உள்ள கால்வாயில் 7 வயது சிறுவன் விழுந்து காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரவு 7.30 மணியளவில் அவசர அழைப்பைப் பெற்றதும் 11 மீட்புப் படை அதிகாரிகள் சிறுவனை மீட்க சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கெடா மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Aminuddin Abd Rahim தெரிவித்தார். 

200 மீட்டர் தூரமுள்ள கால்வாயிலிருந்து சிறுவனின் உடையும் காலணியும் கிடைக்க பெற்ற நிலையில் மீட்பு படை அதிகாரிகள் தேடுதல் பணியைத் துரிதப்படுத்தியுள்ளனர். காணாமல் போன 7 வயது சிறுவன் autism நோயால் பாதிக்கப்பட்டவர் என அறியப்படுகிறது.

நள்ளிரவு 1 மணி நிலவரப்படி சிறுவனைத் தேடும் பணி தொடரப்பட்டு வருகிறது.

Kanak-kanak autistik berusia tujuh tahun dikhuatiri hilang selepas dipercayai terjatuh ke longkang berhampiran rumahnya di Taman Tunku Tabor, Alor Setar. Pencarian oleh JBPM Kedah sedang dijalankan, dengan longkang bersambung ke Sungai Kedah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *