80,589 பேர் வெள்ளத்தால் பாதிப்பு! அபாய நிலையில் 30 ஆறுகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவம்பர் 29: இன்று  காலை 11 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் உள்ள 30 ஆறுகளில் நீர்மட்டம் அபாயகரமான அளவைத் தாண்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் ஏழு ஆறுகள் கிளந்தானிலும், ஆறு திரெங்கானு மற்றும் கெடாவிலும் உள்ளன. அதைத் தொடர்ந்து சிலாங்கூர் மற்றும் ஜொகூரில் தலா மூன்று ஆறுகளும், நெகிரி செம்பிலானில் இரண்டு ஆறுகளும், மலாக்கா, பேராக் மற்றும் பெர்லிஸில் தலா மொன்று எனவும் பதிவாகி உள்ளதாக வெள்ள தகவல் மையம் குறிப்பிட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை காலை 6 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 80,589 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் 467 தற்காலிக நிவாரண மையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நான்கு இறப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *