வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலால் 80% சீனர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச.4-

வேலை வாய்ப்பு மோசடிக் கும்பலால் பாதிக்கப்பட்டவர்களில் 80 விழுக்காட்டினர் சீனர்களாவர்.இவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 30 வயதிற்குட்பட்ட இளம் தலைமுறையினராவர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸைன் தெரிவித்தார்.

போட்டித்தன்மைமிக்க வேலை வாய்ப்புச் சந்தை, கணிசமான தொகை கொண்ட சம்பள வாய்ப்பு ஆகியவை இளம் தலைமுறையினரை வெகுவாகக் கவர்ந்து விடுகின்றன. இங்குள்ள வேலை வாய்ப்புச் சந்தைகளைக் காட்டிலும் மிகச் சிறந்த வேலை வாய்ப்புகளைத் தருவிப்பதாகக் கூறி இக்கும்பல் நம்ப வைத்து விடுகிறது.பாதிக்கப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட நேர்காணலின்படி பெரும்பாலானோர் வணிகத்தைத் தொடங்குவதற்கான ஒரு முன்நடவடிக்கையாகும் என்றுதான் கூறினர்.

தங்களின் குடும்பத்தை மட்டுமே இவர்கள் சார்ந்திருக்க விரும்பவில்லை, மாறாக வணிகத்தைச் சிறியளவில் தொடங்குவதற்கு முன்பு சொந்த வருமானத்தை ஈட்டுவதற்கான அடித்தளத்தை இவர்கள் தேடுகின்றனர். இத்தகைய சிந்தனை அண்மையில் பல்கலைக்கழக, கல்லூரிப் படிப்பை முடித்த மாணவர்கள் குறிப்பாகச் சீன சமூ கத்தினரிடையே தெளிவாகக் காணப்படுகிறது என்று செய்தியாளர்களிடம் பேசிய போது டத்தோஸ்ரீ முகமட் ஷுஹாய்லி முகமட் ஸைன் குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *