காய்கறி பண்ணையில் இருந்து வெளிநாட்டுத் தொழிலாளிகள் 8 பேர் மீட்பு!

- Shan Siva
- 23 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 23: கிளந்தான், குவா முசாங்கில் உள்ள தானா திங்கி லோஜிங்கில் உள்ள ஒரு காய்கறி பண்ணையில் வேலை சுரண்டல் மற்றும் கட்டாய உழைப்புக்கு ஆளான எட்டு வங்கதேச ஆண்கள் மீட்கப்பட்டனர்.
செவ்வாய்க்கிழமை
(ஜனவரி 21) மதியம் 12.30 மணியளவில் புக்கிட் அமான் சிஐடி ஆட்கடத்தல் தடுப்பு
மற்றும் புலம்பெயர்ந்தோர் கடத்தல் தடுப்பு (அடிப்சம்) பிரிவின் (டி 3)
அதிகாரிகளால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
வங்காளதேசத்தைச்
சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் 27 முதல் 47 வயதுக்குட்பட்டவர்கள் என்று புக்கிட்
அமான் டி 3 முதன்மை உதவி இயக்குநர், உதவி ஆணையர்
சோஃபியன் சந்தோங் தெரிவித்தார்.
சம்பளம்
வழங்கப்படாமல் அவர்கள் வேலை செய்ய நிர்பந்திக்கபப்ட்டதாக தாங்கள் நம்புவதாக அவர் கூறினார்.
அவர்களில் சிலர்
ஆறு முதல் ஏழு மாதங்கள் பண்ணையில் பணிபுரிந்துளதாக அவர் கூறினார்.
இந்த
நடவடிக்கையின் போது மூன்று உள்ளூர்வாசிகள் மற்றும் 24 முதல் 50 வயதுக்குட்பட்ட 22
வெளிநாட்டினரும் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *