அரசு அடுக்குமாடிக் குடியிருப்பில் 93 சட்டவிரோத வெளிநாட்டினர் கைது!

top-news

டிசம்பர் 8,

சட்டவிரோதமாக வெளிநாட்டினர் தங்கியிருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் Ampang Jaya பகுதியில் உள்ள அரசு குடியிருப்புப் பகுதியான PKNS அடுக்குமாடிக் குடியிருப்பில் தேசிய குடிநுழைவுத் துறையினர் நடத்திய சோதனையில் 93 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர். 

குடும்பங்களாகக் குடியிருப்புப் பகுயில் அவர் வாழ்ந்து வருவதாகவும் 2 தலைமுறைகளையும் கடந்து சட்டவிரோதமாக அவர்கள் தங்கியிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் INDONESIA, BANGLADESH, MYANMAR, NEPAL, PAKISTAN நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்றும் 4 மாதக் குழந்தை முதல் 55 வயதினர்கள் இச்சோதனையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. 

சம்மந்தப்பட்ட குடியிருப்புப் பகுதில் உள்ள 189 வெளிநாட்டினர்களிடம் சோதனை நடத்தப்பட்டதாகவும் அவர்களின் 93 பேர் எந்தவோர் ஆவணங்களுமின்றி மலேசியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்துள்ளனர்.

Imigresen menahan 93 pendatang asing tanpa izin di Pangsapuri PKNS, Ampang Jaya. Mereka berasal dari Indonesia, Bangladesh, Myanmar, Nepal, dan Pakistan, termasuk bayi 4 bulan. Siasatan mendapati mereka tinggal tanpa dokumen sah selama dua generasi.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *