பேராக்கில் மூன்று ஆண்டுகளில் 95 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன!

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, டிச. 7-

பேராக் மாநிலத்தில் கடந்த 2021ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 95 லட்சம் மரங்கள் நடப்பட்டுள்ளன. மர நடவுத் திட்டத்தின்கீழ் 19,165 ஹெக்டர் நிலப்பரப்பில் அம்மரங்கள் நடப்பட்டுள்ளன என்று அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் தே கோக் லிம் குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டுக்கும் 2025ஆம் ஆண்டுக்கும் இடையில் பேராக்கில் ஒரு கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கை அடுத்தாண்டுக்குள் நிச்சயம் அடைய முடியும் என்று அவர் குறிப்பிட்டார். இந்த ஐந்தாண்டு காலகட்டத்தில் நாடு முழுவதும் பத்து கோடி மரங்கள் நடப்படவுள்ளன. மலேசியாவைப் பசுமைப்படுத்தும் திட்டத்தின்கீழ் இவை நடப்பட்டு வருகின்றன.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *