சுக்மா 2026 போட்டியில் கபடி, சிலம்பம் இடம்பெற வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்து

top-news
FREE WEBSITE AD

(ஆர்.ரமணி)

ஜூன் 20-

2026ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடைபெறவுள்ள சுக்மா தேசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியர்களின் பாரம்பரியமான கபடி மற்றும் சிலம்பம் போன்ற விளையாட்டுகள் இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இக்கோரிக்கை, பினாங்கு மாநிலத்தின் பிறை சை லெங் பார்க்கில் உள்ள பொது மண்டபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான இந்திய பாரம்பரிய விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியின் போது முன்வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வை, பினாங்கு பாரம்பரிய, பண்பாட்டு சமூகநல இயக்கம், சிலம்ப போர்க்கலை இயக்கம் மற்றும் பினாங்கு மாநில கபடி சங்கம் ஆகியவை இணைந்து நடத்தின.இப்போட்டியின் ஏற்பாட்டாளர்கள் சுபடி, சிலம்பம் அடுத்த சுக்மா போட்டியில் கட்டாயம் இடம் பெற வேண்டும் என அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்தனர்.அனைத்து இனங்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் சுக்மாவில் இடம் பெற்று வருகின்றன.




அது போல கபடி மற்றும் சிலம்பம் இடம் பெறுவதை மலேசிய இளைஞர் விளையாட்டு அமைச்சு விரைந்து பரிசீலனை செய்ய வேண்டும் என்று இந்திய பாரம்பரிய விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்த அதன் ஏற்பாட்டு தழு தலைவரான திருமதி சுமதி சுதாகர் மற்றும் மாஸ்டர் கவிகுமார் மற்றும் மாநில கபடி சங்க தலைவரான இராஜேந்திரன் கோரிக்கை விடுத்தனர்.

போட்டிகளில் பினாங்கு மாநிலத்திலுள்ள பல்வேறு தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்தனர். பட்டியலிடப்பட்ட கபடி மற்றும் சிலம்பப் போட்டிகளில் தமிழ்ப்பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பதக்கங்கள், சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வின் பிரதான விருந்தினராக பங்கேற்ற பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோஸ்ரீ சுந்தரராஜு சோமு, போட்டியைத் தொடக்கி வைத்து உரையாற்றினார். அவர் கூறியதாவது: 'வீடு வாங்குபவர்களுக்கு 5விழுக்காடு தள்ளுபடி' என்ற அரசாங்க அறிவிப்பு சிலரால் தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. இது குறித்து அரசாங்கம் தெளிவான விளக்கம் வழங்கி தீர்வு கண்டுள்ளது என்றார்.

இந்திய சமூகத்தில் ஒருமைப்பாடு அவசியம். நாமும் இந்திய முஸ்லிம் சகோதரர்களும் மத வேறுபாடு இல்லாமல் இனம் ஒன்றென இணைந்து வாழ வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில், சிங்கப்பூர் சின்னையா.அவரது மனைவி ஜோபினா நாயுடு,பினாங்கு மாநிலத் தலைவர் ஜெ. தினகரன், பினாங்கு மாநில குற்றத் தடுப்பு அறவாரிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ புலவேந்திரன்,டத்தோ லத்தீப், பினாங்கு கபடி குழுவின் மாநில தலைவர் இராஜேந்திரன், பினாங்கு மாநில பாரம்பரிய பண்பாட்டு சமூக இயக்க தலைவர் திருமதி சுந்தரராஜு சுதாகர் பினாங்கு மாநில போர் கலை இயக்கத்தின் தலைவர் மாஸ்டர் கலைக்குமார் மற்றும் அரசு சாரா இயக்கத் தலைவர்கள் கலந்து கொண்டு நிகழ்வுக்கு உறுதுணையாக இருந்தனர்.




சுபடி போட்டி முடிவுகள்:ஆண்கள் அணி முதல் இடம்: ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியும் இரண்டாம் இடத்தில் ஜாவி தோட்ட தமிழ்ப்பள்ளி மஞ்சள் அணியும் மூன்றாம் இடத்தில் ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் சிவப்பு அணியும்,ஜாவிதோட்டத் ஜாவி நீலம் அணியும் வெற்றி பெற்றனர்.

பெண்கள் அணியில் முதல் இடம்: முதல் இடத்தில் ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி சிவப்பு அணியும், இரண்டாம் இடத்தில் ராமகிருஷ்ணா தமிழ்ப்பள்ளியும்,மூன்றாம் இடத்தில் ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி நீலம் வெற்றி அணியும் வெற்றி பெற்றன.இதனுடன் அனைவரும் இணைந்து இறுதியாக தந்தையர் தினத்தை முன்னிட்டு அணிச்சல் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் மேஜர் டத்தோ லத்திஃப் ஜெ. தினகரன் மற்றும் போட்டியில் கலந்துகொண்ட விளையாட்டாளர்கள் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sukan tradisional India seperti kabaddi dan silambam dicadangkan dimasukkan dalam Sukan SUKMA 2026. Acara peringkat negeri diadakan di Pulau Pinang, disertai pelajar Tamil. Pemenang menerima hadiah dan sambutan Hari Bapa turut diadakan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *