சபா தேர்தல்: 2 தொகுதிகளின் அதிகாரப்பூர்வ முடிவுகள்! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ 29 17வது சபா பொதுத் தேர்தலுக்கான இரண்டு அதிகாரப்பூர்வ முடிவுகளை இன்று இரவு 10.10 மணி நிலவரப்படி தேர்தல் ஆணையம் (EC) உறுதிப்படுத்தியுள்ளது.

கரான் சட்டமன்றத் தொகுதியை GRS கைப்பற்றியதாகவும், பக்காத்தான் ஹராப்பான்  மெலாலாப் தொகுதியை வென்றதாகவும் தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹருன் தெரிவித்தார்.

சபா முழுவதும் மீதமுள்ள 71 தொகுதிகளுக்கான  முடிவுகள்தேர்தல் அதிகாரிகளிடமிருந்து அறிவிக்கப்படுவதற்காக ஆணையம் இன்னும் காத்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.

பல முனைப் போட்டிகள், உள் மாவட்டங்களில், குறிப்பாக வாக்குப் பெட்டிகளை அதிகாரப்பூர்வ எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்வதில் உள்ள தளவாட மற்றும் நிலப்பரப்பு சவால்கள் காரணமாக வாக்கு எண்ணிக்கை செயல்முறை வழக்கத்தை விட அதிக நேரம் எடுத்துக்கொள்வதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதிகாரப்பூர்வ வாக்கு எண்ணிக்கை செயல்முறை வெளிப்படையாகவும், திறமையாகவும், சட்டத்தின்படியும் நடத்தப்படுவதை உறுதி செய்வதில் தேர்தல் ஆணையம் உறுதிபூண்டுள்ளது. மேலும் முடிவுகள் கட்டம் கட்டமாக அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *