தாதியர்களின் கோரிக்கைக்கு தொழிலாளர்கள் குழு ஆதரவு!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், நவ. 26-

தாதியர்களின் வாரப் பணிநேரத்தை 45 மணிநேரத்திற்கு அதிகரிக்கக் கூடாது என்றும் அதனைத் தொடர்ந்து 42 மணிநேரமாகவே பராமரித்து வர வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தாதியர்களின் அக்கோரிக்கைக்கு தொழிலியல் ஒற்றுமை மற்றும் கற்றல் வளங்கள் சங்கம் (எல்எல்ஆர்சி) எனும் தொழிலாளர்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது.

வாரத்திற்கான பணிநேரம் டிசம்பர் முதல் தேதியிலிருந்து நடப்புக்கு வருகிறது. இது சுமார் எழுபத்தேழாயிரம் தாதியர்களைப் பாதிக்கும். ஒரு வாரத்திற்கான பணிநேரத்தை நாற்பது மணிநேரமாக குறைக்க வேண்டும் என்று உலகளாவிய தொழிற்சங்கங்கள் வாதிட்டுவரும் வேளையில், மலேசியாவின் இந்நடவடிக்கை அதற்கு முற்றிலும் முரணாக உள்ளது என்று எல்எல்ஆர்சி கூறியது.

வழக்கமான பணிநேரத்தில் வேலை செய்யும் பெண்களுடன் ஒப்பிடுகையில் ஷிப்டு வேலை செய்யும் பெண்களில் கமார் எழுபது விழுக்காட்டினர் மனஉளைச்சலுக்கு ஆளாகும் சாத்தியம் உள்ளது என்று வெளிநாட்டின் மருத்துவ ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன என்று எல்எல்ஆர்சி அமைப்பின் தலைமைச் செயலாளர் என்.கோபாலகிருஷ்ணன் சுட்டிக் காட்டினார்.

அரசு மருத்துவமனைகளில் வேலை செய்யும் தாதியர்களின் உடல் நலத்தைப் பாதுகாப்பதற்கும் பொதுசுகாதாரச் சேவையின் தரத்தை உயர்த்துவதற்கும் அவர்களின் வேலை நேரத்தைக் குறைக்க வேண்டியது அவசியமாகும் என்று அவர் வலியுறுத்தினார்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *