எஸ்.ஜே.சூர்யா படப்பிடிப்புத் தளத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து: ஒருவர் பலி, 3 பேர் படுகாயம்
- Surendran Sumdraraj
- 03 Jun, 2026
சென்னை, ஜூன் 3 –
நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடித்து வரும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட சிலிண்டர் வெடிப்பு விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 3 பேர் படுகாயமடைந்த சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
படப்பிடிப்பு நடைபெற்று வந்த அரங்கில் பயன்படுத்தப்பட்ட சமையல் எரிவாயு சிலிண்டர் திடீரென வெடித்ததாகக் கூறப்படுகிறது. இந்த வெடிப்பால் படப்பிடிப்பு தளத்தில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் சிதறி ஓடிய நிலையில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். வெடிப்புக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது தொடர்பாகவும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



