தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் Nacsa உறுதியாக உள்ளது!

- Muthu Kumar
- 04 Dec, 2024
கோலாலம்பூர், டிச 4:
டார்க் வெப்பில் விற்கப்பட்டதாகக் கூறப்படும் 17 மில்லியன் மலேசியர்களின் MyKad விவரங்கள் அடங்கிய தரவு மீறல் பற்றிய அறிக்கைகள் குறித்து தேசிய சைபர் பாதுகாப்பு நிறுவனமான Nacsa விசாரணையைத் தொடங்கியுள்ளது.
குற்றச்சாட்டுகளை சரிபார்க்கவும், தரவுகளை மதிப்பிடவும் Nacsa அதன் நிபுணர்கள் குழுவை நியமித்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் Nacsa உறுதியாக உள்ளது என்றும், இவ்விவகாரம் தொடர்பில் தங்கள் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஓர் அறிக்கையில் Nacsa தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பொது மக்கள் தங்கள் வங்கிக் கணக்குகள் மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பில் ஏதேனும் வழக்கத்திற்கு மாறான செயல்கள் நடந்தால் அவற்றை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறு Nacsa வலியுறுத்தியுள்ளது.
அறிமுகமில்லாத இணைப்புகளைக் கையாளும் போது எச்சரிக்கையுடன் செயல்படுமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் நேற்று சமூக ஊடகங்களில் பரவலான கவனத்தைப் பெற்றது. ஹேக்கர்கள் தங்கள் கூற்றுகளுக்கு ஆதாரமாக MyKads இன் படங்களை டார்க் வெப்பில் வெளியிட்டனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *