மடானி அரசாங்கத்தின் ரஹ்மா விற்பனை!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

ஈப்போ, ஜன.25-

இன்று தாமான் பெர்த்தாமா ஜிபி உணவக மையத்திற்கு எதிர்புறத்தில் ரஹ்மா விற்பனை நடைபெறவுள்ளது. இந்த விற்பனை மையம் தாமான் ரிஷா ஸ்ரீ  நாகம்மாள் ஆலயத்தை ஒட்டியுள்ள இடத்தில் நடைபெறுவதாக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் துளசி மனோகரன் கூறினார்.

இங்கு மளிகைப்பொருட்கள் அதிகமான அளவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது. ஆகவே, சுற்று வட்டாரத்திலுள்ள பொதுமக்கள் இங்கு வருகையளித்து வீட்டிற்கு தேவையான பொருட்களை மலிவான விலையில் வாங்கிச் செல்லலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

உள்நாட்டு வாணிபத்துறை இலாகாவின் ஆதரவில் புந்தோங் மக்கள் சேவை மையம் ஒன்றிணைந்து இந்த ரஹ்மா வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இன்று 25.1.2025 சனிக்கிழமை காலை மணி 8.00 க்கு தொடங்கி மதியம் 1.00 மணி வரை இந்த வியாபாரம் நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *