மலாய்க்காரர் உரிமைகள் “களவாடப்பட்டு இருப்பதாக" குற்றச்சாட்டு-மகாதீர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 15 -

நடப்பு ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ், மலாய்க்காரர்களின் உரிமைகள் “களவாடப்பட்டிருப்பதாக" குற்றஞ்சாட்டியிருக்கும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது மற்றும் பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக் கட்சிகளிடமிருந்து அம்னோ மூத்த தலைவர் ஒருவர் ஆதாரங்களைக் கோரியிருக்கின்றார். ஒற்றுமை அரசாங்கத்தில் ஜசெக இடம் பெற்றிருக்கும் ஒரே காரணத்தை வைத்து, மகாதீர் இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கின்றாரா என்று, அம்னோ மூத்த தலைவர்கள் மன்றத் தலைவர் ஒஸ்மான் டேசா கேள்வி எழுப்பி இருக்கின்றார்.

ஆதாரங்கள் இன்றி மகாதீர் இத்தகைய குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது நியாயமற்ற செயல். வரும் பொதுத் தேர்தலுக்கான தமது சொந்த அரசியல் நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளவே மகாதீர் அவ்வாறு கூறியிருக்கின்றார் என்று ஒஸ்மான் தெரிவித்தார். "3ஆர் எனப்படும் இனம், சமயம் மற்றும் அரசக் கழகம் சம்பந்தப்பட்ட விசயத்தில் மலேசியர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தவே மகாதீர் இவ்வாறெல்லாம் குற்றஞ்சாட்டி வருகின்றார். உங்களால் முடிந்தால், ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று அம்னோ உச்சமன்ற உறுப்பினருமான ஒஸ்மான் தெரிவித்தார்.

மலாய்க்காரர்கள் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான விஷயங்களை எதிர்ப்பதாக, அவ்வப்போது விமர்சிக்கப்பட்டு வரும் ஒரு கட்சி அரசாங்கத்தில் இடம் பெற்றிருந்தாலும், மலாய்க்காரர்களின் உரிமைகள் நசுக்கப்படவில்லை என்றும் ஒஸ்மான் குறிப்பிட்டார்.மலாய்க்காரர்களின் "பொது எதிரியை எதிர்க்கப் போவதாக கூறி, சில பெரிக்காத்தான் நேஷனல் தலைவர்களுடன் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஒரு
கூட்டத்தில் பேசியிருந்த மகாதீர், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் மலாய்க்காரர்களின் உரிமைகள் படிப்படியாக பறிக்கப்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

பொதுத் தேர்தலுக்காக ஆதரவைத் திரட்டுவதற்காகவே மகாதீரும் பெரிக்காத்தான் நேஷனலும் வெறுமனமே இவ்வாறு குற்றஞ்சாட்டி வருவதாகக் கூறிய அமானா கட்சியின் ஷா ஆலம் நாடாளுமன்ற உறுப்பினர் அஸ்லி யூசோப், தாங்கள் சுமத்தியிருக்கும் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை காட்டுமாறு மகாதீருக்கும் பெரிக்காத்தானுக்கும் சவால் விட்டிருக்கின்றார்.

'அரசியல் ஆதரவைத் திரட்டுவதற்காக எதிர்க்கட்சிகள் மகாதீரைப் பயன்படுத்தி வருகின்றன. மகாதீரும் தமது தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அவர்களுடன் ஒட்டிக் கொண்டிருக்கிறார். மகாதீர் கூறுவதுபோல் மலாய்க்காரர்களின் எத்தகைய உரிமைகள் “களவாடப்பட்டுள்ளன?" என்று அஸ்லி கேள்வி எழுப்பினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *