மகாதீர் தந்திரவாதி மட்டுமல்ல; தெருச்சண்டைகாரர்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 23: சிங்கப்பூருக்கு பத்து பூத்தேவைத் தாரைவார்த்துக் கொடுத்ததில் டாக்டர் மகாதீர் முகமது ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டார் என்ற உண்மையை அரச விசாரணை ஆணையமான RCI வெளிப்படுத்தியதை அடுத்து, பல மலேசியர்கள் கோபமும் வெறுப்பும் அடைந்தனர்.

மகாதீர், நிச்சயமாக, இது அமைச்சரவையின் ஒருமனதான மற்றும் கூட்டு முடிவு என்று கூறி பிரச்சினையை திசை திருப்பினார். ஆனால் RCI அறிக்கை அவரது விசித்திரக் கதையை ஆதரிக்கவில்லை. அன்புள்ள மகாதீரே, நீங்கள் இறுதியாக வகித்த பிரதமர் பதவியில் என்ன செய்தீர்கள் என்பது மலேசியர்களுக்குத் தெரியும்.

ஆனால், தற்போது 99 வயதாகும் அவர் மலாய் எதிர்க்கட்சித் தலைவர்களின் படையைத் திரட்டி, மலாய்க்காரர்கள் தங்கள் “பொது எதிரியை” சமாளிக்காவிட்டால், அவர்கள் விரைவில் அரசியல் அதிகாரத்தை இழக்க நேரிடும் என்று பொய் ஜாலம் காட்டுகிறார்.

மறைந்த ராஜா பெட்ரா கமருடீன் சொன்னது சரிதான், மகாதீர் ஒரு தந்திரவாதி மட்டுமல்ல, ஒரு மூலையில் சண்டையிடும் தெருச் சண்டைக்காரரும் கூட.

மலாய்க்காரர்கள் அரசியல் அதிகாரத்தை இழக்கிறார்கள், ஒரு பொது எதிரியைக் கொண்டுள்ளனர் என்பதெல்லாம் அவரின் வழக்கமான முட்டாள்தனம் என்று மலேசிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் முகமட் ராஸ்டி தமது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *