மகாதீர் மீது கிரிமினல் விசாரணை வேண்டும்! - ஆர் சி ஐ பரிந்துரை

- Shan Siva
- 05 Dec, 2024
கோலாலம்பூர், டிசம் 5: Batu Puteh, Batuan Tengah, மற்றும் Tubir Selatan விவகாரம் தொடர்பாக முன்னாள் பிரதமர் துன்
டாக்டர் மகாதீர் முகமட் மீது கிரிமினல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரச மலேசிய
விசாரணை ஆணையமான ஆர்.சி.ஐ பரிந்துரைத்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில்
இது தொடர்பான அறிக்கை வெளியிடப்பட்டது. சிங்கப்பூருக்கு பத்து பூத்தே தொடர்பாக சர்வதேச
நீதிமன்றத்தின் (ICJ) தீர்ப்பை
திரும்பப் பெறுவதற்காக மகாதீர் 2018 இல் அமைச்சரவையை தவறாக வழிநடத்தியதாக RCI குற்றம் சாட்டியுள்ளது.
சர்வதேச
நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை டாக்டர் மகாதீர்
தலைமையிலான அமைச்சரவை 2018ல் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, மலேசியா பத்து பூத்தே தீவை சிங்கப்பூருக்கு தாரை வார்த்தது.
குற்றவியல்
சட்டத்தின் 415(பி) பிரிவின்படி டாக்டர் மகாதீருக்கு எதிராக குற்றவியல் விசாரணை
தொடங்கப்படலாம் என்றும் அதே சட்டத்தின் பிரிவு 417 மற்றும் பிரிவு 418ன் படி
தண்டிக்கப்படலாம் என்றும் ஆணையம் கூறியது.
எனவே, இந்த விசாரணையைத் தொடங்குவதற்கு ஆணைக்குழுவின் செயலாளரால் காவல்துறை அறிக்கை
சமர்ப்பிக்க பரிந்துரைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *