ஸாஹிட்டுக்கு எதிரான வழக்கில் குடும்ப பிறப்புப் பத்திரம்,ஐசியை மகாதீர் காட்டினார்!

- Muthu Kumar
- 06 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 6-
தாம் ஒரு மலாய் முஸ்லிம் என்ற தமது அடையாளத்தை உறுதிப்படுத்த, தமது மனைவி, நான்கு பிள்ளைகள் மற்றும் அவர்களின் அசல் பிறப்புப் பத்திரங்கள், தமது பழைய அடையாளக் அட்டையின் பிரதிகள் உட்பட சில ஆவணங்களை, துன் டாக்டர் மகாதீர் முகமது பத்திரிகையாளர்களிடம் நேற்று காட்டினார்.
அப்பிரதிகள் தேசிய பதிவகத்திடமிருந்து பெறப்பட்டதாக, 99 வயதுடைய முன்னாள் பிரதமர் மகாதீர் கோலாலம்பூர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள வரவேற்பு முகப்பிடத்தில் நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தின்போது காட்டினார்.
'இதுதான் உண்மையான அடையாளக் கார்டு. தமது கைத்தொலைபேசியில் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி காட்டியதுபோல் இது இல்லை. முந்தைய காலத்தின் அடையாளக் அட்டையின் பின்புறத்தில் அதன் உரிமையாளரின் பெயர் இருக்கும்.
“கைத்தொலைபேசியில் அனைத்து வகையான படங்களையும் பதிவேற்றம் செய்யலாம். அவற்றின் நம்பகத்தன்மையை சரிபார்க்க முடியாது என்று நேற்று வியாழக்கிழமை மகாதீர் கூறினார்.இந்த பத்திரங்களை செய்தியாளர்களிடம் காட்டுவதற்கு முன்னர் அவர், கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அம்னோ தலைவருமான அஹ்மாட் ஸாஹிட்டுக்கு எதிராக தாம் தொடுத்திருக்கும் அவதூறு வழக்கில் சாட்சியம் அளித்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *