பவுல் யோங் மீதான பாலியல் புகார் மீட்டுக் கொண்ட பணிப்பெண்!

- Muthu Kumar
- 06 Feb, 2025
ஈப்போ, பிப். 6-
கடந்த 2019ஆம் ஆண்டில் முன்னாள் துரோனோ சட்டமன்ற உறுப்பினர் பவுல் யோங் மீது பாலியல் வல்லுறவு புகார் கூறியிருந்த இந்தோனேசிய பணிப்பெண் ஒருத்தி அப்புகார் போலியானது என்பதை நேற்று ஒப்புக்கொண்டார்.தன்னுடைய பணிக்கால ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பே தாயகம் திரும்ப வேண்டும் என்பதற்காக அப்பெண் அவ்வாறு பொய்யுரைத்தார் என்று அவரின் வழக்கறிஞர் பதூர்ரஹ்மான் எஸ்எச். என்பவர் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அப்பெண்ணின் அறிக்கையை நீதிமன்றத்தில் அந்த வழக்கறிஞர் வாசித்தார்.
என்னுடைய நடவடிக்கைக்காக வருந்துகிறேன். மலேசிய நீதிமன்றத்தில் பொய்ச் சாட்சியம் அளித்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். வேகமாக தாயகத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதற்காகவே அந்தப் பொய்ச் சாட்சியத்தை அளித்தேன் என்று அந்த அறிக்கையில் அந்தப் பணிப்பெண் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 7ஆம் தேதியன்று இரவு 8.15மணிக்கும் இரவு 9.15மணிக்கும் இடையில் ஈப்போவில் உள்ள பவுல் யோங்கின் வீட்டில் அவர் தன்னை வன்புணர்வு செய்தார் என்று அப்பெண் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதனைத் தொடர்ந்து, பவுல் யோங் மீது குற்றம் சுமத்தப்பட்டு குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.மேல்முறையீடு செய்யப்பட்ட பின்னர் அவரின் 13ஆண்டுகால சிறைத்தண்டனை எட்டு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *